மேல் மாகாணம், வடக்குமாகாணம், மற்றும் புத்தளம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு இன்று காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த தளர்வானது இன்று நண்பகல் 12 மணிவரை நடைமுறையில் இருக்கும்.
மக்கள் தமது அத்தியாவசிய சேவைகளை உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய குறித்த காலத்தில் பெற்றுக்கொள்ளமுடியும்.
இதேவேளை வடக்கு மாகாணம், புத்தளம் மாவட்டத்துக்கு நாளை காலை 6 மணியிலிருந்து 12 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும்.
மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய இடங்களுகக்கு ஊரடங்கு தொடரவுள்ளது.
Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை