Friday 19th of April 2024 04:31:36 PM GMT

LANGUAGE - TAMIL
ஊரடங்கு நீடிப்பு தொடர்பிலான அறிவித்தல்!

ஊரடங்கு நீடிப்பு தொடர்பிலான அறிவித்தல்!


வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை வெள்ளிக்கிழமை தளா்த்தப்பட்டு மீண்டும் 30-ஆம் திகதிவரை அமுல் செய்யப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு இன்று காலை விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பம் ஊரடங்கு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்துடன் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு மிகவும் இடர் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீடுகளில் இருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் பற்றிய இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள நேரங்கள் மீண்டும் அறிவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE