கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தற்போது மூன்று வைத்தியசாலைகளில் 97 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இவர்களில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 86 பேரில் மூவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 83 பேர் சாதாரண சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 10 பேரும், முல்லேரியா வைத்தியசாலையில் ஒருவரும் கொரோனா தொற்றுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை