தமிழ்நாட்டில் இன்று மேலும் 3 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 29 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்தியளவில் மேலும் 63 பேருக்கு புதிதாக உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரையான மொத்த பாதிப்பு 720 ஆக அதிகரித்துள்ளது.
டுபாயில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு சென்ற 24 வயதுடைய ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. அதற்கமைய இன்றும் இதுவரை 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியளவில் கொரோனா பாதிப்பு 720 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 50 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக கேரளாவில் 137 பேருக்கும், மகாராஷ்ட்ராவில் 125 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு