கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நிலவரங்கள் தொடா்பில் வெள்ளை மாளிகையில் தினசரி இடம்பெறும் செய்தியாளா் சந்திப்பின்போது நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடு்கையில் ட்ரட்ப் இந்தத் தகவலைக் கூறினார்.
இது ஒரு பயனுள்ள பேச்சுவார்த்தையாக இருக்கும். நாங்கள் வைரஸ் பாதிப்புக்கள் குறித்துப் பேசுவோம் என ட்ரம்ப் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் தொகை சீனாவை விட அமெரி்க்காவில் அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 82,500 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில்அமெரிக்காவில் தொற்று அதிகரிப்பு சோதனையானதே. ஆனால் சீனாவின் தரவுகளை நம்ப முடியாது என்றும் ட்ரம்ப் கூறினார்.