Tuesday 16th of April 2024 12:39:07 AM GMT

LANGUAGE - TAMIL
மக்களை படுகொலை செய்தவர்களை   விடுதலை செய்ய முடியும் என்றால் நீதிமன்றத்தை மூடுங்கள்!

மக்களை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்ய முடியும் என்றால் நீதிமன்றத்தை மூடுங்கள்!


கடந்த யுத்தகாலத்தில் யாழ் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த கொலையாளியான சுனில் ரத்னாயக்க என்னும் இரணுவ சிப்பாய் பொது மன்னிப்பு அடிப்படையில் ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே வைத்திய கலாநிதி சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;;

நேற்றைய தினம் ஊடகங்களில் வந்த செய்தியில் மிருசுவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாழ் மிருசுவில் பகுதியில் எட்டு பொதுமக்களை கொலை செய்த கொலையாளியை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களை படுகொலை செய்தவர்கள் இராணுவத்தினராக இருந்தாலும் கொலையாளி கொலையாளியே.

இராணுவம் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு பொது மன்னிப்பு வழங்குவதாக இருந்தால் தமிழர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு நிற்பது.

கட்டாயப்படுத்தல்கள் மூலமும் சித்திரவதைகள் மூலமும் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்று நீதி மன்றம் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் இந்த பேரினவாத அரசுகள் என்றும் கரிசனை கொண்டதில்லை.

ஆனால் ஒரு அநீதியை செய்து நேரடியாக குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட கொலையாளியை இந் ஜனாதிபதி விடுவித்துள்ளார்.

இதை எவ்வாறு ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற கொள்கையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதா.

மேலும் பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக இருந்தால் அவர்களை விடுவிப்பதற்கு முன்னர் தீர்ப்பு வழங்கிய நீதித்துறை சட்டத்துறை மற்றும் விசாரணை செய்தவர்களின் சிபாரிசுகள் பெறப்பட வேண்டும். அவை பெறப்பட்டனவா என்னும் விபரங்களும் இதுவரை வெளிவரவில்லை.

எனவே கொரோனா அனர்த்த காலத்தை சாட்டாக வைத்து தமிழர்களுக்கு எதிரான அநீதிகள் இழைக்கப்படுமாக இருந்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது. இந்த செயற்பாட்டினை வன்மையாக கண்டிப்பதாக வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்தார்.


Category: உள்ளூர, பகுப்பு
Tags: இலங்கை, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE