அண்மையில் புலம்பெயர்நாடு ஒன்றில் நடைபெற்ற கோவில் திருவிழா நிகழ்வு ஒன்றுக்காக சென்று திரும்பிய யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் நால்வர் யாழ்ப்பாணத்தில் வீடுகளில் குடும்பத்தாருடன் தனிமையில் கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது.
கடந்தவாரம் நால்வரும் தாயகம் திரும்பிய நிலையில் அவர்கள் நால்வரும் வீடுகளில் குடும்பத்தாருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ்ப்பாணம் தாவடி மற்றும் இணுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அவர்கள் வீடுகளில் தமது குடும்பத்தினருடன் தனித்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வீடுகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் பொலிஸாரும் தாமும் இடையிடையே பரிசீலிப்பதாகவும் சுகாதார உத்தியோத்தர்கள் தெரிவித்தனர்.
Category: செய்திகள், பகுப்பு
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்