கொரோனா வைரஸ் பரவிய சீனாவின் வுஹான் நகரம் இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் இன்று (28) மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பிற நகரங்களிலிருந்து மக்கள் வுஹானுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் வுஹான் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹூபே மாநிலத்தின் தலைநகரான வுஹான் நகரில் 50,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானதுடன், கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
வுஹானில் சுமார் 11 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.
அவர்கள் முடக்கப்பட்ட நகரத்தில் சுமார் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா