Tuesday 23rd of April 2024 07:40:10 AM GMT

LANGUAGE - TAMIL
பொருட் கொள்வனவில் தீவிரம்
கிளிநொச்சியில் ஊரடங்கு தளர்தப்பட்ட நிலையில்  மக்கள் பொருட் கொள்வனவில்  தீவிரம்!

கிளிநொச்சியில் ஊரடங்கு தளர்தப்பட்ட நிலையில் மக்கள் பொருட் கொள்வனவில் தீவிரம்!


ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் இன்றும் ஈடுபட்டனர். காலை 6 மணிமுதல் 2 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஈடுபட்டனர்.

கடந்த நாட்களில் காணப்பட்டது போன்று இன்றைய தினம் மக்கள் நெரிசல் காணப்படவில்லை. கிளிநொச்சி சேவைச்சந்தையில் மக்கள் நெரிசல் மிகவும் குறைவாக இன்றைய தினம் காணப்பட்டது. தொடர்ச்சியான ஊரடங்கு சட்டம் காரணமாக மக்களின் கையிருப்புக்கள் தீர்ந்துள்ள நிலையில் பொருளாதார ரீதியில் மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE