Tuesday 23rd of April 2024 11:43:59 PM GMT

LANGUAGE - TAMIL
இந்திய இறப்பு அதிகரிப்பு
கொரோனா;  குஜராத்தில் பலியானவருடன் இந்திய இறப்பு 31 ஆக அதிகரிப்பு!

கொரோனா; குஜராத்தில் பலியானவருடன் இந்திய இறப்பு 31 ஆக அதிகரிப்பு!


கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 45 பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குஜராத்தின் பாவ் நகரில் வசித்து வந்த குறித்த பெண் வேறு எங்கும் பயணமாகியிருக்காத நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அப்பெண்மணி சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதைவிட மேற்குவங்க மாநிலத்தில் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்புடன் இந்தியாவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை 10.00 மணி நிலவரத்தின் அடிப்படையில் இன்று புதிதாக 30 இற்கு மேற்பட்டவர்கள் இனம்காணப்பட்டதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்வர்களது எண்ணிக்கை 1,171 ஆக உயர்ந்துள்ளதாகவும், 98 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்தியளவில் அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் புதிதாக 12 பேருடன் கொரோனா பாதித்தவர்களது எண்ணிக்கை 215 ஆக உயர்வடைந்துள்ளது. கேரளாவில் 202 ஆகவும் உள்ளது. மத்தியபிரதேசத்தில் 8 பேரும், குஜராத்தில் 6 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 3 பேரும், ராஜஸ்தான், பஞ்சாப், அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய இடங்களில் தலா ஒவ்வொருவருக்கும் புதிதாக இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 10.00 மணி நிலவரத்தின் அடிப்படையில் 32 பேர் புதிதாக இனம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE