இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் இன்று குணமடைந்துள்ளனர்.
இவர்கள் நால்வரும் கொழும்பு அங்கொடை தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து இன்று காலை வீடு திரும்பியுள்ளனர்.
அதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய 104 தொற்றாளர்களும் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, 117 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலைகளில் கண்காணிப்பில் உள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Category: உள்ளூர, புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கொழும்பு