Friday 19th of April 2024 04:15:04 PM GMT

LANGUAGE - TAMIL
ஊரடங்கை மீறியவர்கள்
ஊரடங்கை மீறிய மேலும் 809 பேர் கைது!

ஊரடங்கை மீறிய மேலும் 809 பேர் கைது!


இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய மேலும் 809 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.

அவர்களிடமிருந்து 166 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6 ஆயிரத்து 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், ஆயிரத்து 643 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் கூறியுள்ளது.

இதனிடையே, ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊரடங்குச் சட்ட விதிமுறைகளை மீறியுள்ளார் என்று கடற்படையினர் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE