Thursday 18th of April 2024 09:17:48 PM GMT

LANGUAGE - TAMIL
இராணுவத் தளபதி
தனிமைப்படுத்தல் முகாம்;  132 பேர்  வௌியேற்றம்!

தனிமைப்படுத்தல் முகாம்; 132 பேர் வௌியேற்றம்!


வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்ட மேலும் 132 பேர் இன்று (30) வீடு திரும்பியுள்ளனர்.

தியத்தலாவை, புனானை உள்ளிட்ட மத்திய தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர் என்று கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர்கள் இத்தாலி, தென் கொரியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இலங்கைக்குத் திரும்பியவர்களாவர் என்று இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

இதனிடையே, தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் தங்கியிருந்த 77 பேர் நேற்று அவர்களது வீடுகளுக்குத் திரும்பியிருந்தனர்.

தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த குறித்த குழுவினர், மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களை சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE