இலங்கையில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பில் இத்தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுவரை சிகிச்சையின் மூலம் குணமடைந்து 14 பேர் வெளியாகியுள்ளதாகவும், கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 104 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.