இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு டுபாயில் மரணமடைந்துள்ளார்.
கேரளா மாநிலத்தின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் டுபாயில் வசித்து வந்த நிலையில் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இந்நிலையில்தான் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நேர்மறை பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா