இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் இன்று குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவருடன் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 18 போ் இதுவரை குணமடைந்துள்ளனா்.
இலங்கையில் இதுவரை 143 கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டனா். அவா்களில் 18 போ் குணமடைந்தனா். இருவா் உயிரிழந்துள்ளனா்.
தற்போது 123 உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அத்துடன் தொற்று அறிகுறிகளுன் 231 போ் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இலங்கையில் 13 மாவட்டங்களில் இதுவரை தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனா் எனவும் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை