இந்தியாவில் கொரோனாவுக்கு பாதித்தவர்களது மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 637 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். 132 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் 400 இற்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பாட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 302 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து கேரளத்தில் 241 பேரும் தமிழ்நாட்டில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா