ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஹங்கேரி நீச்சல் வீராங்கனை போக்லர்கா கபாசுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்த இவருக்கு முதல் கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது.
பின்னர் இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த மேலும் 8 நீச்சல் வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஹங்கேரியில் கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளதுடன் 525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்