Wednesday 24th of April 2024 10:49:47 PM GMT

LANGUAGE - TAMIL
ரோட்ரிகோடூர்ட்டே
ஊரடங்கை மீறுவோரை  சுட்டுக் கொல்லுங்கள் -பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!

ஊரடங்கை மீறுவோரை சுட்டுக் கொல்லுங்கள் -பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!


பிலிப்பைன்ஸில் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டு ஜனாதிபதி ரோட்ரிகோடூர்ட்டே பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

பிலிப்பைன்ஸில்2,633 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

பிலிப்பைன்ஸ் - தீவானலூசனில் வசிக்கும் 57 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடுமையான முடக்கல்உத்தரவுகளின் கீழ் உள்ளனர்.

கடுமையாகஉத்தரவுகளையும் மீறி மணிலாவில் பலர் நேற்று முன்தினம் வீதிகளில் இறங்கினர்.இரண்டுவாரங்களுக்கு தாம் முடக்கப்பட்டதிலிருந்து தங்களுக்கு உணவு கூட கிடைக்கவில்லை என்று அவா்கள் வாதிட்டனர்.

எனினும் இக்குற்றச்சாட்டை மறுத்த அரசு,ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி அந்த மக்களை விரட்டியடித்தது. இவ்வாறான நிலையிலேயே ஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக்கொல்லுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எனினும் இக்குற்றச்சாட்டை மறுத்த அரசு, ஆயுதப்படைகளைப் பயன்படுத்தி அந்த மக்களை விரட்டியடித்தது.

இவ்வாறான நிலையிலேயே ஊரடங்கு உத்தரவை மீறுவோரை சுட்டுக்கொல்லுமாறு பிலிப்பைனஸ் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE