Friday 19th of April 2024 03:22:01 PM GMT

LANGUAGE - TAMIL
அபாய வலயம்
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் தொடர்ந்து அபாய வலயமாகப் பிரகடனம்!

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் தொடர்ந்து அபாய வலயமாகப் பிரகடனம்!


கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் அதிகமுள்ள மாவட்டங்களாகத் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 36 நோயாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக புத்தளம் மாவட்டத்தில் 25 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 24 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 11 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 2 பேரும் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

காலி, கேகாலை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களைத் தனிமைப்படுத்தும் நிலையங்களில் 34 பேரும், இலங்கை வந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் 5 பேரும் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் அதிகமுள்ள மாவட்டங்களாக அரசால் தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE