யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் முன்னாள் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான சபா.ரவீந்திரன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார்.
நீண்டகாலமாக உடல் நலப் பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
தற்போதைய சூழலில் இறுதி நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகளோ மக்களோ பங்கெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவருடைய இறுதி நிகழ்வு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி