Friday 29th of March 2024 01:55:36 AM GMT

LANGUAGE - TAMIL
கால்பந்து
U-17 மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடர் ஒத்திவைப்பு!

U-17 மகளிர் உலகக்கிண்ண கால்பந்து தொடர் ஒத்திவைப்பு!


இந்தியாவில் நடைபெறவிருந்த 17 வயதிற்குட்பட்ட மகளிருக்கான உலகக்கிண்ண காலபந்து தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி முதல் 21ம் திகதி வரை 17 வயதிற்குட்பட்ட மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்கும் உலகக்கிண்ண கால்பந்து தொடரை நடத்த திட்டமிடப்பட்டு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) போட்டி அட்டவணையை வெளியிட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் நிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் போட்டியை திட்டமிட்டபடி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என நிர்வாகக்குழுவுக்கு தொடர்ந்து பரிந்துரை செய்யப்பட்டதையடுத்தே போட்டியை ஒத்திவைப்பதாக பிபா அறிவித்துள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட போட்டிக்கான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் பிபா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE