மூன்று வகையிலான சர்வதேச போட்டிகளிலும் டெஸ்ட் போட்டியே மிகவும் பிடிக்கும் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரட்ங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன கிரிக்கெட் போட்டிகளும் இல்லாத நிலையில் வீடுகளுக்குள் முடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் தமது பொழுதுகளை ஒவ்வாரு விதமாக கடந்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட்ட வீரர் கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராம் லைவ்-செசன் உரையாடலை மேற்கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது விராட் கோலி தெரிவித்திருப்பதாவது,
டெஸ்ட் போட்டிதான் மிகவும் பிடிக்கும். டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என நான் ஐந்து முறை கூறுவேன். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட்டுதான் வாழ்க்கையின் பிரதிநிதித்துவம்.
நீங்கள் ரன்கள் அடிக்கலாம். அடிக்காமல் போகலாம். மற்றவர்கள் பேட்டிங் செய்யும் போது கைகளை தட்டலாம். நீங்கள் உங்களுடைய அறைக்கு செல்ல வேண்டும். அடுத்த நாள் விளையாட வரவேண்டும். நீங்கள் ரன் அடித்தாலும் அடிக்காவிடிலும் இந்த வழக்கத்தை கடைப்பிக்க வேண்டும். நீங்கள் யாரிடமும் போட்டியிடாத வாழ்க்கை போன்றது. டெஸ்ட் கிரிக்கெட் என்னை சிறந்த மனிதாக உருவாக்கியுள்ளது என்று கூறியிருந்தார் விராட் கோலி.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா