உலகெங்கும் கொரோனா பாதிப்பு தலைவிரித்தாடி வரும் நிலையில் அதனால் ஒட்டுமொத்த உலகமும் தன்னைத்தானே முடக்கியுள்ளதால் கேள்விக்குறியாகியிருக்கும் எழை மக்களின் துயர்துடைக்கும் வகையில் பிரபல கால்பந்து வீரர் நெய்மர் 19 கோடி ரூபாவை கொரோனா நிதியத்துக்கு வழங்கியுள்ளார்.
கொரோனா வைரசால் பதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 28 வயதான பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் இந்நிதியை வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல நிதியத்துக்கும், பிரேசிலைச் சேர்ந்த தொலைக்காட்சித் தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவர் நடத்தும் அறக்கட்டளைக்கும் இத்தொகையை பிரித்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்