உலகெங்கும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் இயல்புநிலை முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக 3 சூப்பர் ஸ்டார்கள் நடிப்பில் எடுக்கப்பட்ட குறும்படம் இன்று இரவு ஒளிபரப்பாக உள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு எடுக்கப்பட்டிருக்கும் குறும்படத்தில் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தமிழ்த் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஆகிய மூன்று சூப்பர் ஸ்டார்களும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள்.
இவர்களுடன் பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், அலியா பட் உள்ளிட்ட பிரபல நடிகர், நடிகையர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
‘ஃபமிலி’ என்று பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படமானது ஊரடங்கு காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது, உடல் நலனைப் பேணுவது, வீட்டில் இருந்து பணிபுரிவது, சமூக விலகல் உள்ளிட்ட விடயங்களை பற்றிய விழிபுணர்வை ஏற்படுத்தும் வித்தில் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்குறும் படத்தை ப்ரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். இக்குறும்படம் இன்று இரவு 9.00 மணிக்கு சொனி தொலைக்காட்சியில் உளிபரப்பாக ஏற்படு செய்யப்பட்டுள்ளது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா