Saturday 20th of April 2024 07:29:58 AM GMT

LANGUAGE - TAMIL
பெர்னெட் ஹன்சலிஸ்
கொரோனா பரவியதால் பிரான்சில் கால்பந்து மருத்துவ ஆலோசகர் தற்கொலை!

கொரோனா பரவியதால் பிரான்சில் கால்பந்து மருத்துவ ஆலோசகர் தற்கொலை!


கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து பிரான்சில் கால்ப்பந்து அணி ஒன்றின் மருத்துவ ஆலோசகராக கடமையாற்றிய மருத்துவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பிரோன்சையும் பதம்பார்த்து வருகிறது. நேற்று மட்டும் 833 பேரின் உயிர்களை பலியெடுத்துள்ளதன் மூலம் மொத்தமாக 8 ஆயிரத்து 911 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்சில் உள்ள ரிம்ஸ் மாகாணத்தை சேர்ந்த லீக் ஒன் சைட் ஸ்டெடி டி ரிம்ஸ் எனப்படும் கால்பந்து கிளப் அணிக்கு மருத்துவ ஆலோசகராக இருந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

பெர்னெட் ஹன்சலிஸ் என்ற 60 வயதுடைய மருத்துவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்த கால்பந்து கிளப் அணிக்கு மருத்துவ ஆலோசகராக செயற்பட்டு வந்துள்ளார். மனைவியுடன் வசித்து வந்த நிலையில் அவருக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்து உயிரிழந்துள்ளமை பிரான்ஸ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE