கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரட்ங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைப்பட நடிகை சமீரா ரெட்டி தனது குழந்தைகளுடன் வீட்டில் மகிழ்வாக பொழுதைப் போக்கி வருகின்றார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவரும் நடிகை சமீரா ரெட்டி இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் குழந்தைகளுடன் மகிழ்வாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட சமீரா ரெட்டிக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. திருமணத்தின் பின்னர் குடுபத்தை கவனித்துக் கொள்வதற்காக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருந்த சமீரா ரெட்டி தற்போதைய நாடுதழுவிய ஊரடங்கு வேளையிலும் குழந்தைகளுடன் மகிழ்வாக பொழுதைப்போக்கி வருகின்றார்.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா