Friday 19th of April 2024 02:08:21 AM GMT

LANGUAGE - TAMIL
சுகாதார பரிசோதகர்கள்
கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் மீது விசேட சோதனை!

கிளிநொச்சியில் வர்த்தக நிலையங்கள் மீது விசேட சோதனை!


கிளிநொச்சியில் மாவட்ட செயலகம், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை இன்று மேற்கொண்டிருந்தனர்.

வர்த்தக நிலையங்கள் அதிகளவான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் இன்று விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் உள்ள மொத்த வியாபார நிலையங்கள் இவ்வாறு இன்று விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி சேவைச்சந்தையில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சுகாதார பரிசோதகர்களு்ம, பொலிசாரும் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மருந்தடிக்கப்பட்ட பழங்கள், காலாவதியான பொருட்கள் ஆகியன அழிக்கப்பட்டன. குறித்த பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் இதன்போது தெரிவித்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE