கொரோனொ சந்தேகத்தில் சிகிச்சைக்காக காலி, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அங்கிருந்து இன்று மாலை தப்பிச்சென்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் காரணமாக குறித்த கைதி கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவர் பாதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் கைதி இன்று பிற்பகல் கொரோனா சிகிச்சைப்பிரிவிலிருந்து தப்பிச்சென்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை சிறையிலிருந்து பூசா சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் குறித்த கைதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் எனத் தெரியவருகிறது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை