Friday 29th of March 2024 07:00:41 AM GMT

LANGUAGE - TAMIL
மருதங்கேணி
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பணிகள் வழமைக்கு!

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பணிகள் வழமைக்கு!


யாழ்ப்பாணம், வரமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை செயற்பாடுகள் இன்று இயல்புக்குத் திரும்பியது.

சுவாசப் பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதனையடுத்து கொரோனா அச்சம் காரணமாக நேற்று மாலை தொடக்கம் தை்தியசாலைச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன.

தனது மகளை பார்ப்பதற்காக அவுஸ்ரேலியா சென்று மீண்டும் இலங்கைக்கு திரும்பிய வடமராட்சி கிழக்கு ஆழியவளையைசட் சேர்ந்த பெண் நேற்று சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் மருதங்கேணி பிரதேச மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து யாழ். போதனா மருத்துவ மனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் மருதங்கேணி மருத்துவ மனை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் சிகிச்சை அனைத்தையும் நிறுத்தி சுய தனிமையில் இருந்தனர்.

குறித்த பெண்ணிற்கு கொரோனா இல்லை என இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், வடமராட்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE