ஆனையிறவு சோதனை மையம் ஊடாக நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை யாழ்.திரும்பிய பொதுமகன் ஒருவர் பற்றிய தகவல்களை கரவெட்டி பிரதேச செயலகம் கோரியுள்ளது.
படையினரது சோதனை சாவடியில் தனது தகவலை இராசா மாணிக்கம் (527452530V) இல 81,கரவெட்டி வடக்கு என அவர் பதிவு செய்துள்ளார்.
எனினும் குறித்த முகவரியில் அவரை இனங்காண முடியாத நிலையில் கரவெட்டி பிரதேச செயலகம் அவரது தகவல்களை கோரியுள்ளது.
தகவல் தெரிந்தோர் கரவெட்டி பிரதேச செயலக தொலைபேசி இலக்கமான 021 226 3258 இற்கு தகவல் தர கோரப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி