கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு உணவு வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
தினக்கூலி வேலை செய்யும் குடும்பங்கள், வீடு இல்லாமல் தெருவோரங்களில் வசித்து வருபவர்களுக்கு உணவு வழங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊடாக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த உதவியை செய்துள்ளார்.
இவ்வாறு ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவினை வழங்கும் பொறுப்பை சச்சின் டெண்டுல்கர் ஏற்றுள்ளதாக அப்னாலயா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தமது ருவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்திய அரசின் கொரோனா தடுப்பு நிதியத்திற்கு 50 இலட்சம் ரூபாவினை சச்சின் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா