இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திரசிங் டோனியை ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்கள். அவரால் இந்திய அணிக்கு இன்னும் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் நசீர் உசேன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரரான மகேந்திரசிங் தோனி, கடந்த 10 மாதங்களாக இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடுவாரா, இல்லையா என்ற கேள்வி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் விடைகாண முடியாது தொக்கி நிற்கின்றது.
இந்நிலையில்தான், டோனிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நசீர் உசேன் கருத்துத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியில் இது தொடர்பில் குறிப்பிடாவது,
ஒரு முறை டோனி ஓய்வு பெற்று விட்டால், அதன் பிறகு அவரை மீண்டும் அணிக்கு கொண்டுவர முடியாது. கிரிக்கெட் விளையாட்டில் உலகமே போற்றக் கூடிய ஒரு சில ஜாம்பவான்களே இருக்கிறார்கள்.
அத்தகைய மகத்தான வீரர்களை அரிதாக, அதாவது தலைமுறைக்கு ஒருவரைத்தான் பார்க்க முடியும். அப்படிப்பட்ட அப்படிப்பட்ட டோனியை அவசரப்பட்டு முன்கூட்டியே ஓய்வு பெற வைத்துவிடாதீர்கள். டோனியின் மனதில் என்ன உள்ளது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். எது எப்படியோ அவர் மீண்டும் களம் இறங்குவது தேர்வாளர்களின் கையில்தான் உள்ளது.
இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகும் அளவுக்கு டோனியிடம் இன்னும் போதுமான திறமை இருக்கிறதா என்ற கேள்வி மட்டுமே இங்கு எழ வேண்டும். சொல்லப்போனால் அணிக்கு தேர்வாக வேண்டிய எல்லா வீரர்களுக்குமே இந்த கேள்வி பொருந்தும்.
நான் டோனியை பார்த்தவரையில் அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நினைக்கிறேன். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போபது ஒரு சில ஆட்டங்களில் இலக்கை விரட்டும் போது டோனி சோபிக்க தவறியிருக்கலாம். ஆனால் அவரிடம் இன்னும் திறமை இருக்கிறது என்று நசீர் உசேன் மேலும் தெரிவித்திருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா