சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன்பாக திருநங்கைகள் தீடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு முன்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திருநங்கைகள் கூடி போராட்டம் நடத்தியுள்ளர்.
நாடுமுழுவதும் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு நிவாரண நிதி தருமாறு கோரி 8 திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் ரஜினி குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து ரஜினியின் மனைவி காவலாளி மூலம் 5 ஆயிரம் ரூபா கொடுத்து சமாதானப்படுத்தி அனுப்பியதாக அறிய முடிகிறது.
இச்சம்பவம் குறித்து சென்னை புளியந்தோப்பு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.