யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு சமீபமாக 137 கிலோக்கிராம் கஞ்சா போதைப்பொருள்களை ஏற்றிவந்த படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணற்காடு கடற்கரையிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் வைத்தே படகு கடற்படையினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் பருத்தித்துறை கொட்டடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
கைதானவர்களும் கைப்பற்றப்பட்டபொருட்களும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கரவெட்டி