Friday 19th of April 2024 10:44:51 PM GMT

LANGUAGE - TAMIL
ஐபிஎல்-2020
ஐபிஎல்-2020 தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு!

ஐபிஎல்-2020 தொடர் காலவரையின்றி ஒத்திவைப்பு!


ரீ-20 கிரிக்கெட்டிற்கு புது வேகத்தை கொடுத்த ஐபிஎல்-2020 போட்டிகள் காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டி தொடர்கள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு தொடர்களும் நிறுத்தி வைக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.

அந்தவககையில், ரீ-20 கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் எதிர்பார்ப்பினையும் பெற்றுள்ள ஐபில் கிரிக்கெட் தொடரும் கொரோனா பரவுதல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நிலையில் தற்போது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மார்ச்-29 அன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல்-15 வரை ஐபில்-2020 தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே-03 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதையடுத்து தொடர் காலவரையறை இன்றி ஒத்திவைக்கபடுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடும் 8 அணி நிர்வாகத்திற்கும் இவ் அறிவித்தல் பிசிசிஐ யினால் வழங்கப்பட்டுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE