Friday 19th of April 2024 04:38:53 PM GMT

LANGUAGE - TAMIL
கொரோனா
கொரோனாவால் இங்கிலாந்து முதியோர் இல்லங்களில் 1,400 பேர் உயிரிழப்பு!

கொரோனாவால் இங்கிலாந்து முதியோர் இல்லங்களில் 1,400 பேர் உயிரிழப்பு!


இங்கிலாந்தில் உள்ள முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருபவர்களில் 1,400 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளனர்.

உலகளாவிய கொரோனா உயிரிழப்புகளில் முதியவர்களது எண்ணிக்கையே கணிசமாக இடம்பிடித்து வருகிறது. கூடுதலாக முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வருபவர்கள் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் சுமார் இரண்டாயிரம் முதியோர் இல்லங்கள் இயங்கிவரும் நிலையில் அங்குள்ள முதியோருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்காத நிலையில் பலர் பரிதாபமாக உயிரிழந்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து அரசின் உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் இவ்வாறு முதியோர் இல்லங்களில் இருந்த 1,400 பேர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE