தென்னாபிரிக்க டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவி குயிண்டன் டீ கொக்கிற்கு இல்லை என தென்னாபிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் கிரேக் ஸ்மித் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இங்கிலாந்துடனான தொடரில் சந்தித்த படுதோல்வியை அடுத்து தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தென்னாபிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் இடைக்கால தலைவராக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். மார்க் பவுச்சர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருநாள் மற்றும் ரீ-20 அணியின் தலைவர் பொறுப்பில் இருந்து டூ பிளெஸ்சிஸ் விலகியதையடுத்து குயிண்டன் டீ கொக் அவ் அணிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
மேலும் இரண்டு ஆண்டுகள் தெ.ஆபிரிக்க கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவாக ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கருத்துத்தெரிவித்த ஸ்மித் கூறியதாவது,
குயிண்டன் டீ கொக் ஒரு நாள், ரீ-20 கிரிக்கெட் அணிகளின் தலைவராக செயல்படுவார். மூன்று வகை கிரிக்கெட்டிலும் அணித்தலைவராக பணியாற்றுவது மிகவும் சவாலானது. நாங்கள் அவர் மீது சுமையை திணிக்க விரும்பவில்லை என்பதை என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து நான் தெரிந்து கொண்டது.
டெஸ்ட் போட்டிக்கான அணித்தலைவர் என்று ஒருவர் பெயரை தற்போது குறிப்பிட முடியாது. நிறையப் பேர் ஒரே தரநிலையில் உள்ளனர் என ஸ்மித் கூறியிருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: