பிரமாண்ட இயக்குநர் எனப் பெயரெடுத்த ராஜமவுளி இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் மமேஷ்பாபு நடிக்க உள்ளார.
பாகுபலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமவுளியின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டிபோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ராஜமவுளி இயக்கும் அடுத்த படைப்புகள் குறித்த தகவல்களும் முக்கியத்துவத்துடன் கவனிப்பை பெற்று வருகின்றது.
அந்தவகையில் தற்போது ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்துவரும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தை ராஜமவுளி இயக்கி வருகிறார். அதற்கு அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில் அது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து அடுத்த படத்தை ராஜமவுளி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகவலை மகேஷ் பாபு தரப்பு உறுதிசெய்துள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளது.