தமிழ் சினிமாவின் என்றென்றும் கனவுக்கன்னியாக வலம் வரும் நதியா மகள்களுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
1980 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த நதியா 1994 இற்கு பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி குடும்பத்துடன் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் வசித்து வந்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் 10 ஆண்டு இடைவெளியில் எம்.குமரன் சன் ஒஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து 2009 வரை நேரடி தமிழ்த் திழைரப்படங்களில் நடித்து வந்தவர் மீண்டும் தீவிர நடிப்பில் இருந்து ஒதுங்கியுள்ளார்.
தற்போது சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் நதியா சமூக வலைத்தளங்களினூடாக அறிமுகமாகியுள்ளார். அதிலே தனது இரண்டு மகள்களுடன் நிற்கும் புகைப்படத்தை முதன் முதலாக பதிவேற்றம் செய்துள்ளார்.