Tuesday 16th of April 2024 07:28:59 AM GMT

LANGUAGE - TAMIL
அக்தர்
வசிம் அக்ரமை கொலை செய்திருப்பேன் - அக்தர் பரபரப்பு பேச்சு!

வசிம் அக்ரமை கொலை செய்திருப்பேன் - அக்தர் பரபரப்பு பேச்சு!


பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தன்னிடம் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு கேட்டிருந்தால் அவரை கொலை செய்திருப்பேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் பாக்கிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர்.

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கிய பாக்கிஸ்தான் அணி இன்று மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் சம்பந்தப்பட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் தண்டைனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாக்கிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் செய்ப் அக்தர் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியிருந்தார். அவர் மேலும் கூறுகையில்,

1990 களில் நான் சில போட்டிகளை பார்த்துள்ளேன். அதில் வசிம் அக்ரம் தனது அற்புதமான பந்து வீச்சால் வெற்றிபெற முடியாது என்று நினைத்த போட்டியையும் பாக்கிஸ்தான் வெற்றிபெற உதவிகரமாக இருந்துள்ளார்.

ஒரு வேளை வசிம் அக்ரம் மேட்ச்-பிக்சிங்கில் ஈடுபடுமாறு என்னிடம் கூறியிருந்தால், அவரை துவம்சம் செய்திருப்பேன். அல்லது கொலை கூட செய்திருப்பேன். ஆனால் அவர் என்னிடம் ஒருபோதும் அதுகுறித்து பேசியது கிடையாது. இதை நான் எப்போதும் தெளிவாக கூறுவேன்.

நான் அவருடன் ஏழு மதல் எட்டு வருடங்கள் விளையாடியிருப்பேன். கடைநிலை வீரர்கள் விக்கெட்டுக்களை வீழ்த்த என்னிடம் விட்ட போதிலும், ரொப் ஓடர் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுக்களையும் வீழ்த்தும் பொறுப்பிலும் என்னை சேர்த்துக் கொண்டார். அவருக்கு விக்கெட் வீழ்த்தும் வாய்ப்புகள் இருந்தாலும் கூட என்னுடைய முதன்மை பந்து வீச்சை கருத்தில் கொண்டு பந்து வீச அனுமதித்திருந்தார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE