இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக இந்திய பிரதமரால் அமைக்கப்பட்ட கொரோனா நிதியத்திற்கு இளைய தளபதி விஜய் ஐம்பது இலட்சம் உள்ளிட்ட ஒரு கோடி ரூபாவினை வழங்கியுள்ளார்.
ஒட்டுமொத்த நாடே முடங்கிப் போயுள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா கலைஞர்கள் தொழில் இழந்து பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவி செய்யும் முகமாக தமிழ்த்திரைப்பட தொழிலாளர்கள் அமைப்பான பெப்சி நிதி சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறது.
தமிழ் திரைப்பட பிரபலங்கள் அந்நியதியத்திற்கு நிதி உதவியை வழங்கி வருகின்றனர். இதையடுத்து இளைய தளபதி விஜய் பெப்சிக்கு 25 இலட்சமும், தமிழ்நாடு அரசின் நிதியத்திற்கு 25 இலட்சமும், பிரதமர் மோடியின் கொரோனா நிதியத்திற்கு 50 இலட்சமும் என ஒரு கோடி (இந்திய மதிப்பில்) ரூபாவினை நடிகர் விஜய் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: சினிமா, புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு