Friday 19th of April 2024 09:06:44 PM GMT

LANGUAGE - TAMIL
அஜித்குமார்
ஏழை ரசிகரின் குடிசை வீட்டில் தேநீர் குடித்த அஜித்!

ஏழை ரசிகரின் குடிசை வீட்டில் தேநீர் குடித்த அஜித்!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார் ஏழை ரசிகர் ஒருவரது குடிசை வீட்டிற்கு சென்று தேநீர் குடித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அஜித்தின் நண்பர் சுஹேல் சந்தோக் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கடந்த 2013-ம் ஆண்டு வீரம் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் அஜித்தும், சுஹேலும் 500 கிலோமீட்டர் பைக் டிரிப் சென்றுள்ளனர். அப்போது தேநீர் குடிப்பதற்காக ஓர் இடத்தில் நிறுத்தியுள்ளனர். அந்த சமயத்தில் அருகில் வசித்த குடும்பத்தினர் அஜித்தை அடையாளம் கண்டுள்ளனர்.

அங்கு நின்றதன் காரணத்தை அறிந்து தமது குடிசை வீட்டிற்கு வந்து தேநீர் அருந்திச் செல்லுமாறு அழைத்துள்ளார்கள். இதனை ஏற்று அவர்களது குடிசை வீட்டுக்கு சென்று அவர்கள் போட்டு கொடுத்த தேநீரை அருந்தியுள்ளர்.

அதன் பின்னர், அவர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்க வெட்கப்பட்டு தயங்கி நின்றுள்ளனர். இதை அறிந்த அஜித் அவர்களை அழைத்து புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாது, அந்த புகைப்படத்தை பிரிண்ட் போட்டு அனுப்பியும் வைத்ததாக சுஹேல் தெரிவித்துள்ளார்.

சுஹேல் சந்தோக், வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE