தனிப்பட்ட சிக்கசல்கள் காரணமாக மூன்று முறை தற்கொலை செய்ய எண்ணியிருந்ததாக, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சக வீரரான ரோகித் சர்மாவுடன் சமூக வலைத்தளத்தினூடாக உரையாடிய போதே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அது குறித்து ஷமி மேலும் கூறியதாவது,
கடந்த 2015 உலக கோப்பையில் நான் காயமடைந்த போது முழுமையாக குணமடைய 18 மாதங்கள் ஆகின. அது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான மற்றும் நெருக்கடியான காலம் என்று சொல்லலாம்.
நான் மீண்டும் விளையாடத் தொடங்கிய போது சில தனிப்பட்ட சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது தற்கொலை செய்து கொள்ளலாம் என மூன்று முறை யோசித்தேன் எனக் கூறியிருந்தார்.
2018 ம் ஆண்டு மார்ச் இல் ஷமியின் மனைவி, அவர் மீது குடும்ப வன்முறை, பிற பெண்களுடன் தொடர்பு, மேட்ச் பிக்சிங் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அவர் மீது சுமத்தப்பட்டது. இதனால் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது.
மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டால் விசாரணை முடியும் வரை இந்திய கிரிக்கெட் வாரியம் ஷமியின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. பின்னர் அனைத்தையும் சமாளித்து மீண்டும் மைதானத்திற்கு திரும்பினார்.
அந்த சமயத்தில் 24 மணிநேரமும் என்னுடன் குடும்பத்தினர் இருந்தார்கள். அவர்கள் அப்போது என்னுடன் இல்லாமல் போயிருந்தால் நான் மோசமான முடிவை எடுத்திருப்பேன். இக்கட்டான சூழ்நிலையில் என்னுடன் முழுவதுமும் இருந்த எனது குடும்பத்திற்கு நன்றி கூறுகிறேன் எனவும் ஸ்ரீமி உருக்கமாக கூறியிருந்தார்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா