இங்கிலாந்தில் சமூக முடக்கல் நடவடிக்கை ஜூன் - 01 வரை நீட்டிக்கப்படும் என அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய அவா் சமூக முடக்கலை நீடிக்கும் திட்டத்தை அறிவித்தாா்.
இங்கிலாந்துக்குள் நுழையும் வெளிநாட்டினர் எவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவாா்கள் எனவும் அவா் கூறினார்.
சமூக முடக்கல் காரணமாக பிரித்தானியா்கள் மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளதாகக் கூறிய அவர், எனினும் சமூக முடக்கலைத் தளா்த்த இது சரியான நேரமல்ல எனவும் கூறினாா்.
பிரிட்டனில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. அங்கு கடந்த மார்ச் 23 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து