Thursday 28th of March 2024 03:39:33 AM GMT

LANGUAGE - TAMIL
புதிய படம்
மே-18 இல் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது!

மே-18 இல் புதிய படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகிறது!


புதுமுக இயக்குநர் சபரிநாதன்-முத்துப்பாண்டி இயக்கியுள்ள புதிய படம் தொடர்பான அறிவிப்பை மே-18 ம் திகதி வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து புதுமுக இயக்குநர் சபரிநாதன்-முத்துப்பாண்டி கருத்து தெரிவத்தாவது,

கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழக அரசு 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அதன் காரணமாக பல பணிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதில் சினிமா துறையில் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு 144 தடை உத்தரவை தளர்த்தி சினிமா துறையில் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளான ரீ ரிக்கார்டிங் டப்பிங் போன்ற நிலைகளில் தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி ரீரெக்கார்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மே 18-ஆம் தேதி முதல் பார்வையை வெளியிடவுள்ளோம். இந்த சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல கதையோடு உங்களை விரைவில் சந்திப்போம் என்று தெரிவித்திருந்தார்.


Category: சினிமா, புதிது
Tags: தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE