கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் கிழக்கு பகுதிகளை சக்திவாய்ந்த சூறாவளி நேற்று வியாழக்கிழமை தாக்கியதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
தொற்று நோய் சமூக முடக்கல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் சுமாா் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வரையான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனா். அத்துடன் விவசாயச் செய்கைகளும் பெருமளவு அழிந்துள்ளன.
மணிக்கு 165 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளி காரணமாக கடலோரப் பகுதிகள் பெரும் இழப்புக்களைச் சந்தித்துள்ளன.
வட-கிழக்கு பிகோல் பிராந்தியத்தில், 145,000 க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு நகா்ந்துள்ளனா்.
அனா்த்த முகாமைத்துவப் பிரிவினரால் உடனடியாக பல அவசரகால இடைத்தங்கள் முகாங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வெளியேறிய மக்கள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் சிவில் பாதுகாப்பு துறை பணிப்பாளா் கிளாடியோ யூகோட் தெரிவித்துள்ளாா்.
இதேவேளை, தன்னாா்வு மீட்புப் பணியாளா்கள் உடனடியாகக் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட முன்னா் கொரோனா தொற்று நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முக கவசங்கள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டியிருந்தது. மேலும் கொவிட் -19 தொற்று நோயைக் கருத்தில் கொண்டு அவசரகால முகாம்களுக்கு அதிக எண்ணிக்கையில் மக்களை கொண்டு செல்ல முடியவில்லை என யூகோட் கூறினார்.
இதற்கிடையே, பிலிப்பீன்சில் இதுவரை 12 ஆயிரம் போ் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். 18 பேர் உயிர் இழந்தனர்.
இவ்வாறான நிலையில் ஏற்பட்டுள்ள சூறாவளி அங்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.