Friday 29th of March 2024 12:45:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனா நெருக்கடியால் உலகில் 2.8 கோடி அறுவைச் சிகி்ச்சைகள் இரத்து, ஒத்திவைப்பு!

கொரோனா நெருக்கடியால் உலகில் 2.8 கோடி அறுவைச் சிகி்ச்சைகள் இரத்து, ஒத்திவைப்பு!


கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் இதுவரை 2.8 கோடி அறுவை சிகிச்சைகள் இரத்து செய்யப்பட்டோ, ஒத்தி வைக்கப்பட்டோ இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மொத்தம் 120 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 71 நாடுகளில் உள்ள 359 மருத்துவமனைகளில் இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ள அறுவை சிகிச்சைகளின் முழு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் 190 நாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பால் மருத்துவ துறையில் பல இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

‘இந்த நெருக்கடியால் பிற நோயாளிகள் தங்களின் நோய் தீர நீண்ட காலம் காத்திருக்க நேரிடும். இது அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி மரணத்தையும் விளைவிக்கும் என ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு எலும்பியல் அறுவை சிகிச்சைகள் மட்டுமே 63 இலட்சம் இரத்து செய்யப்பட்டுள்ளன.

23 இலட்சம் புற்றுநோய் நோயாளிகளின் அறுவை சிகிச்சையும் இரத்து செய்தோ தள்ளி வைக்கப்பட்டோ உள்ளன.

வரும் வாரங்களில் மேலும் 24 இலட்சம் அறுவை சிகிச்சைகளை தள்ளி வைக்க வாய்ப்புகள் உள்ளன எனவும் அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE