தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சூர்யா நடித்த அயன் திரைப்படத்தின் 2ம் பாகத்தில் மீண்டும் இயக்குநர் கே.வி.ஆனந்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் அயன், மாற்றான் மற்றும் காப்பான் ஆகிய 3 படங்கள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'அயன்-2' இற்காகNவு இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஊரடங்கு நிறைவுக்கு வந்த பின்னர் வெளிவரும் என எதிர்பார்க்கபட்டுகிறது.
இதேவேளை, சுதா கெங்காராவ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் போன்ற படங்களில் சூர்யா நடிக்க உள்ளார். இதன்பின்னர் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.