சுமாா் 60 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய சா்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஹோமகமவில்அமைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
அமைச்சரவை இணைச் செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பிரியத் பாண்டு விக்ரம மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மைதானம் அமையவுள்ள பகுதியை ஆய்வு செய்தனர்.
ஹோமகம – தியாகம பகுதியில் மைதானம் அமைப்பதற்காக 26 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது .
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது இந்த திட்டம் தொடங்கப்பட்டது. எனினும் பின்னா் அது இடைநிறுத்தப்பட்டது.
இந்த விளையாட்டரங்கம் ஆரம்பத்தில் 40,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்டதாக அமையும். இங்கு பகல் - இரவு போட்டிகளை நடத்த முடியும்.
இரண்டாவது கட்டத்தின் கீழ் அரங்கத்தில் கூடுதலாக 20,000 இருக்கைகள் அமைக்கப்படும். இதன்மூலம் அரங்கின் மொத்த இருக்கை திறன் 60,000 ஆக இருக்கும் எனவும் அமைச்சா் பந்துல குணவா்த்தன கூறினாா்.
Category: விளையாட்டு, புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை